385வது சென்னை தினம் பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதும் சென்னையை கொண்டாடுவோம்: முதல்வர் வாழ்த்து

சென்னை: பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதும் சென்னையை கொண்டாடுவோம் என 385வது சென்னை தினத்தையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது. வாழ்வு தேடி வந்த பலருக்கும் வசந்தத்தை வழங்கிட வா என்று தன் மடியோடு ஏந்திக்கொண்ட தாய் சென்னை. இந்தத் தருமமிகு சென்னையே நமது சமத்துவபுரம்! பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதிய – எழுதும் நம் சென்னையைக் கொண்டாடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post 385வது சென்னை தினம் பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதும் சென்னையை கொண்டாடுவோம்: முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: