ரூ.18 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

 

ஈரோடு, ஆக. 22: வெப்பிலி ஒழுங்குமுறை கூடத்தில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.18 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் போனது.ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் பங்கேற்க வெப்பிலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,250 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், ஒரு கிலோ தேங்காய் குறைந்தபட்ச விலையாக ரூ.28.50க்கும், அதிகபட்ச விலையாக ரூ.28.30க்கும், சராசரி விலையாக ரூ.31.25க்கும் ஏலம் போனது. மொத்தம் 609 கிலோ எடையிலான தேங்காய்கள் விற்பனையானது. இவற்றின் விற்பனை மதிப்பு ரூ.18 ஆயிரத்து 705 என விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

The post ரூ.18 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: