ஏரியில் மீன்பிடித்தவரை தாக்கிய வாலிபர் கைது

சேலம், ஆக.22: சேலம் சூரமங்கலம் சேலத்தான்பட்டி ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (எ) குள்ளக்குமார் (39). இவரும் அவரது மகன் நவீனும் சேலத்தான்பட்டி ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த தர்(22), சதீஸ்குமார் ஆகியோர் குடிபோதையில் அங்கு வந்தனர். மீன்பிடித்துக்கொண்டிருந்த சிவக்குமாரிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் கல், மற்றும் கட்டையால் தாக்கினர். இதில் சிவக்குமார் காயம் அடைந்தார். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தரை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் சதீஷ்குமாரை தேடி வருகின்றனர்.

The post ஏரியில் மீன்பிடித்தவரை தாக்கிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: