இந்நிலையில் கடந்த 19ம் தேதி இரவு ராஜஸ்தானின் 44 பிஎஸ் கிராமத்தில் பஞ்சாப் காவல்துறையினர் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் இணைந்து கூட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆளில்லா விமானம் மூலம் கடத்தி வரப்பட்டு வயல் வெளியில் வீசப்பட்டிருந்த 3 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பொருளை பஞ்சாப் காவல்துறை மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.15 கோடி. போதைப்பொருளை கடத்தி வந்தவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
The post இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ரூ.15 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் appeared first on Dinakaran.