காஞ்சிபுரத்தில் நாளை முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர் கூட்டம்: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில், முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் (22.8.2024ம் தேதி) நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. எனவே, முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்வு நாள் கூட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்களை சார்ந்தோர்கள் தங்களின் அடையாள அட்டையுடன் பெருமளவில் கலந்துகொண்டு தங்களின் மனுக்களை இரட்டை பிரதிகளில் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக வழங்கி பயன்பெறலாம்.

The post காஞ்சிபுரத்தில் நாளை முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர் கூட்டம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: