சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் இருந்து 3 டன் எடைகொண்ட கட்டுமான மரப்பொருட்களை ஏற்றிக்கொண்டு பெங்களூர் நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. சுங்குவார்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் எதிர்திசை சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், லாரியில் இருந்த 3 டன் மரப்பொருட்கள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலையில் சிதறின. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார், பொக்லைன் உதவியுடன் கவிழ்ந்த லாரியை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.

The post சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: