எனவே, தரிசன வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில், நாள்தோறும் பிரசாதம் வழங்கும் திட்டத்தின் கீழ் லட்டு வழங்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில பக்தர்கள் வருகை அதிகரித்ததால், மாடவீதியில் கனரக வாகனங்கள் அனுமதிக்கவில்லை. சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் நகருக்கு வெளியே, காந்தி நகர் திறந்தவெளி மைதானம் மற்றும் அண்ணா நுழைவாயில் அருகே நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் இன்று அதிகாலை 2.28 மணிக்கு தொடங்கியதால், நேற்று மாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். அதனால், நேற்று இரவு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அதனால், வழக்கத்தைவிட கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது குறிப்பிடத்தக்கது.
The post விடுமுறை தினமான நேற்று அண்ணாமலையார் கோயிலில் 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்: 4 மணி நேரம் வரிசையில் காத்திருப்பு appeared first on Dinakaran.