அப்போது, தேயிலை தோட்டத்தில் 12 அடி நீள மலைப்பாம்பு ஒன்று இருப்பது தெரியவந்தது. அந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து, கொலக்கொம்பை பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் கொண்டு சென்று விடுவித்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்,‘கோட்டக்கல் தேயிலை தோட்டத்தில் 12 நீளம் உள்ள மலைப்பாம்பு இரையை உட்கொண்டு, அங்கிருந்து செல்ல முடியாமல் இருந்தது. இதனை பிடித்து அருகில் உள்ள காட்டிற்குள் கொண்டு சென்று விடப்பட்டது. எனவே, பொதுமக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் கொள்ள வேண்டாம்’ என்றனர்.
The post தேயிலை தோட்டத்தில் மலைப்பாம்பு மீட்பு appeared first on Dinakaran.