நாம் நமது அனுபவங்களில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களையும் திறன்களையும் பகிர்ந்து கொள்வோம். முக்கிய சவால்களை கையாள்வதில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உலக தெற்கு நாடுகளின் குரல் என்பது இதுவரை கேட்கப்படாதவர்களின் தேவைகள், விருப்பங்களுக்கு குரல் கொடுக்கும் ஒரு தளமாகும். நமது பலம் நமது ஒற்றுமையில் உள்ளது என்று நான் நம்புகிறேன். இந்த ஒற்றுமையின் சக்தியுடன் புதிய திசை நோக்கி நாம் நகர்வோம். இவ்வாறு அவர் கூறினார். மேலும், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை (டிபிஐ) மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சமூக தாக்க நிதியத்திற்கு ரூ.200 கோடியை இந்தியா தனது ஆரம்ப பங்களிப்பதாக வழங்குவதாகவும் மோடி அறிவித்தார்.
The post தீவிரவாதம், பிரிவினைவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தல்: பிரதமர் மோடி எச்சரிக்கை appeared first on Dinakaran.