சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும், சேலம் அதி விரைவு ரயில் மற்றும் குருவாயூர் விரைவு ரயில்கள் சென்னை கடற்கரை, பெரும்பூர், அரக்கோணம் சந்திப்பு வழியாக செங்கல்பட்டு சந்திப்பை வந்தடைகின்றன. இந்த ரயில்கள் சென்னை எழும்பூரில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னை எழும்பூர் முதல் மதுரை வழியாக செல்லும் தேஜஸ் விரைவு ரயில் உள்ளிட்ட 11 ரயில்கள் தாம்பரத்தில் நிற்காது என்றும் இவை செங்கல்பட்டில் இருந்து புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும் இன்று கொல்லம், நாகர்கோவில், தஞ்சாவூர், செங்கோட்டை உள்ளிட்ட சென்னை எழும்பூர் வந்தடைய வேண்டிய 14 ரயில்கள் தாம்பரத்தில் நிற்காமல் மாம்பலம் வந்தடைய உள்ளன. மதுரை , திருச்சி, மன்னார்குடி உள்ளிட்ட 9 ஊர்களில் இருந்து சென்னை எழும்பூர் வந்தடைய வேண்டிய ரயில்களில் 8 ரயில்கள் செங்கல்பட்டு சந்திப்போடு நிறுத்தப்பட உள்ளதாகவும் திருச்செந்தூரில் இருந்து புறப்படும் செந்தூர் அதிவிரைவு ரயில் மட்டும் விழுப்புரம் சந்திப்போடு நிறுத்தப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
The post தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்… 11 விரைவு ரயில்கள் எழும்பூர் பதிலாக செங்கல்பட்டில் இருந்து புறப்படும் என அறிவிப்பு!! appeared first on Dinakaran.