இந்நிலையில் தலிபான்கள் ஆட்சியில் 14 லட்சம் ஆப்கான் சிறுமிகளின் கல்வி தடைபட்டிருப்பதாக யுனெஸ்கோ அதிர்ச்சி தகவலை வௌியிட்டுள்ளது. இதுகுறித்து யுனெஸ்கோ வௌியிட்ட அறிக்கையில், “ தலிபான்கள் ஆட்சியை பிடித்த பிறகு ஆரம்ப கல்விக்கான அணுகல் குறைந்துள்ளது. கல்வி மறுக்கப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை கடந்த 2023 ஏப்ரலில் அதன் முந்தைய எண்ணிக்கையில் இருந்து 3 லட்சமாக அதிகரித்துள்ளது.
கல்விக்கான தடைகள் அறிமுகப்படுத்தும் முன்பே பள்ளிக்கு வராத சிறுமிகளின் எண்ணிக்கையை சேர்த்தால் ஆப்கானில் 25 லட்சம் பெண்கள் கல்விக்கான உரிமையை இழந்துள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தலிபான்கள் ஆட்சியில் ஆப்கானில் 14 லட்சம் சிறுமிகளின் கல்வி இழப்பு: யுனெஸ்கோ அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.