அதை அவர்களில் ஒருவர் செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார். இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண், ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில், 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கவிதாசன், திவாகர், பிரவீன் மற்றும் சிறுவனை நேற்று கைது செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக எஸ்.பி., ஆசிஷ் ராவத், ஒரத்தநாடு ஏஎஸ்பி சகுனாஸ் ஆகியோர் இளம்பெண்ணிடம் நேரில் சென்று விசாரணை நடத்தினர். கைதான 4 பேரையும் ஒரத்தநாடு நீதிமன்றத்தில் இன்று போலீசார் ஆஜர்படுத்துகின்றனர்.
The post தஞ்சை அருகே கத்தி முனையில் நண்பர்களுடன் சேர்ந்து காதலியை கூட்டு பலாத்காரம் செய்த வாலிபர்: சிறுவன் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.