கோவை மாவட்டம் சூலூர் விமானப் படை தளத்தில் ராணுவ தளவாட கண்காட்சி!!

கோவை: சூலூர் விமானப் படை தளத்தில் ராணுவ தளவாட கண்காட்சி நடைபெற்று வருகிறது. பன்னாட்டு கூட்டு விமானப் படை பயிற்சியின் ஒரு பகுதியாக கண்காட்சி நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் 15ம் தேதி பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 62 அரங்குகளில் ஹிந்துஸ்தான், பெல் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தேஜஸ், Su-30MKI, Mig29K உள்ளிட்ட இந்தியாவின் அதிநவீன போர் விமானங்கள் இடம்பெற்றுள்ளன. ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 11.30 மணிக்கு கண்காட்சியை துவக்கிவைத்து பார்வையிடுகிறார்.

The post கோவை மாவட்டம் சூலூர் விமானப் படை தளத்தில் ராணுவ தளவாட கண்காட்சி!! appeared first on Dinakaran.

Related Stories: