மைசூருவில் ஆக. 10ம் தேதி நடந்த மாநாட்டில் பேசிய ஒன்றிய அமைச்சர் எச்.டி.குமாரசாமி, பெங்களூரின் ஜேடரஹள்ளி சாலையில் இருக்கும் பாதாளசாக்கடை மேல்ஹோல்களின் மூடிகளை துணை முதல்வர் டி.கே.சிவகுமார் திருடி காயலான் கடையில் விற்பனை செய்து வந்தார் என பேசினார். இதை எதிர்த்து மைசூரு நகர காங்கிரசார் துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
The post ஒன்றிய அமைச்சர் குமாரசாமி மீது போலீசில் காங்கிரஸ் புகார் appeared first on Dinakaran.