இதனால், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், கத்தியால் நவாஸ்கானை சரமாரியாக வெட்டிவிட்டு, அவரிடம் இருந்த ரூ.50 லட்சத்தை பறித்து சென்றனர். படுகாயமடைந்த நவாஸ்கானை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், வடக்கு கடற்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களை தேடிவந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, செங்குன்றத்தை சேர்ந்த கார்த்தி, போத்திராஜ், திருவொற்றியூரை சேர்ந்த சுரேஷ் ஆகிய 3 பேர் நேற்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி அவர்கள் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வடக்கு கடற்கரை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
The post செல்போன் கடை ஊழியரை வெட்டி ரூ.50 லட்சம் பறித்த வழக்கில் நீதிமன்றத்தில் 3 பேர் சரண் appeared first on Dinakaran.