4 புதிய மாநகராட்சிகள் -தொடங்கி வைக்கிறார் முதல்வர்

சென்னை: 4 புதிய மாநகராட்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி மாநகராட்சிகள் இன்று தொடங்கப்பட உள்ளது. புதுக்கோட்டை, திருவண்ணாமலை, காரைக்குடி, நாமக்கல்லை மாநகராட்சியாக 2023-ல் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். 4 புதிய மாநகராட்சிகளை காணொலிக்காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

மேலும் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை சார்பில் முடிவுற்ற ரூ.800 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் இன்று தொடங்கப்பட உள்ளது. ரூ.800 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். ரூ.1192 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

The post 4 புதிய மாநகராட்சிகள் -தொடங்கி வைக்கிறார் முதல்வர் appeared first on Dinakaran.

Related Stories: