அண்ணா பல்கலை துணை வேந்தர் பதவிக்காலம் நிறைவு பல்கலை வழிநடத்த நிர்வாக ஒருங்கிணைப்பு குழு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் பதவிக்காலம் நிறைவடைந்ததால், பல்கலைக்கழகத்தை வழிநடத்த உயர்கல்வி செயலர் தலைமையில் நிர்வாக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக வேல்ராஜ் இருந்து வந்த நிலையில் அவரது பதவிக்காலம் கடந்த 10ம் தேதியுடன் நிறைவடைந்தது. பொதுவாக, துணைவேந்தர் பதவி காலம் நிறைவு பெற்றதும், அந்த பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பதற்கான நிர்வாக குழு அமைக்கப்படும்.

அந்தவகையில் பல்கலைக்கழகத்தை வழிநடத்த உயர்கல்வி செயலாளர் பிரதீப் யாதவ் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த குழுவின் தொழில்நுட்ப கல்வி இயக்குனரக ஆணையர் ஆபிரகாம், அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் உஷா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

ஏற்கனவே சென்னை பல்கலைக்கழகம், மதுரை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய 4 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். தற்போது அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவி காலமும் நிறைவு பெறுவதால், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் காலி இடங்கள் 5 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post அண்ணா பல்கலை துணை வேந்தர் பதவிக்காலம் நிறைவு பல்கலை வழிநடத்த நிர்வாக ஒருங்கிணைப்பு குழு appeared first on Dinakaran.

Related Stories: