பறிமுதல் செய்யப்பட்ட 5 நாட்டு வெடிகுண்டுகளையும் அப்புறப்படுத்த போலீசார் முடிவு செய்தனர். இந்நிலையில் இன்று காலை 10 மணியிலிருந்து 10.45 மணி வரை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் 5 நாட்டு வெடிகுண்டுகளையும் சென்னை பெருநகர 5வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஜெகதீசன் உத்தரவின்பேரில், செயலிழக்க வைக்கும் பணி நடைபெற்றது. செம்பியம் சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் சிரஞ்சீவி முன்னிலையில் இப்பணி நடைபெற்றது. இதையடுத்து கொடுங்கையூர் குப்பை கிடங்கின் உட்பகுதியில் ஆழமாக பள்ளம் தோண்டப்பட்டு வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் துறை ஆய்வாளர் முத்துமணி தலைமையில் 5 நாட்டு வெடிகுண்டுகளும் செயலிழக்க வைக்கப்பட்டது. கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
The post ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான குற்றவாளிகளிடமிருந்து: பறிமுதல் செய்த 5 நாட்டு வெடிகுண்டு கொடுங்கையூர் குப்பை கிடங்கில் அழிப்பு appeared first on Dinakaran.