இதனை நம்பி ரூ.15 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர் வேலை வாங்கி தரவில்லை. இதுகுறித்து உரிய பதில் அளிக்காததுடன், பணத்தை திருப்பி கேட்டதற்கு ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்தார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என தெரிவித்திருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய அஸ்தம்பட்டி போலீசார், கண்காணிப்பாளர் தமிழரசன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே இந்த விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு அதன் அறிக்கை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கண்காணிப்பாளர் தமிழரசனை சஸ்பெண்ட் செய்து, பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
The post வேலை வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.