விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 5 நட்சத்திர ஓட்டல்களின் ‘பார்’களை மூட உத்தரவு: உரிமம் அதிரடி ரத்து

சென்னை: சென்னை மாநகரில் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த ஐந்து தனியார் நட்சத்திர ஓட்டல்களின் மதுபானக் கூடங்களின் உரிமங்களை ரத்து செய்து உடனடியாக மூட மதுவிலக்குத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகரில் உள்ள ரட்டா சோமர்செட், தாஜ் கிளப் ஹவுஸ், விவிஏ ஓட்டல்ஸ் (ரேடிசன் ப்ளூ) ஹையத் ரீஜன்சி, தி பார்க் ஆகிய 5 தனியார் நட்சத்திர ஓட்டல்களில் எப்.எல்.3 மதுபானக் கூடங்கள் அரசு உரிமம் பெற்று இயங்கி வந்தன. அவற்றுள் சட்டவிதிகளுக்கு மாறாக வெளிநபர்களை மது அருந்த அனுமதித்தல், மதுபானங்களை விநியோகம் செய்தல் முதலிய குற்றங்களில் ஈடுபட்ட விவரங்கள் தெரியவந்தன. எனவே ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் செயல்பட்டு வந்த இந்த மதுபானக் கூடங்களை நடத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த எப்.எல்.3 உரிமங்களைத் தற்காலிகமாக ரத்து செய்தும் அந்த மதுபானக் கூடங்களை உடனடியாக மூடவும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 5 நட்சத்திர ஓட்டல்களின் ‘பார்’களை மூட உத்தரவு: உரிமம் அதிரடி ரத்து appeared first on Dinakaran.

Related Stories: