*இந்த ஆண்டு முதல் ரேஷன் கடைகள் திறந்து அதன் மூலம் இலவச அரிசி, மானிய விலையில் கோதுமை, பருப்பு வகைகள், சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகிய பொருட்கள் வழங்கப்படும்.பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
*புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.6,500-ல் இருந்து ரூ.8,000-ஆக உயர்ந்துள்ளது. மழைக்கால நிவாரணத் தொகை ரூ.3000-ல் இருந்து ரூ.6000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
*பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு ரூ.20ஆயிரம்.ரூ.15 ஆயிரம், ரூ.10ஆயிரம் வழங்கப்படும்.
*மடுகரையில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியை ரூ.15 கோடியில் மேம்படுத்தி முன்மாதிரி கலைக் கல்லூரியாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் ரூ.1 கோடி செலவில் ஹாக்கி திடல் அமைக்கப்படும்.
*பாடங்கள் வாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ.5ஆயிரம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு பள்ளி மாணவர்களுக்கு காலணி, புத்தகப்பை வழங்கப்படும்.
*காரைக்காலில் பழமையான அருங்காட்சியகம் அமைக்கப்படும். பாரதியார் மற்றும் பாரதிதாசன் அருங்காட்சியகங்கள் மேம்படுத்தப்படும்.
*புதுச்சேரியில் ஆயுஸ் மருத்துவப் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மாடி தோட்டம் அமைக்க ஒரு வீட்டிற்கு ரூ.5,000 வழங்கப்படும்.தீவனம் தயாரிக்கும் இயந்திரம் 400 விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
The post இந்த ஆண்டு முதல் ரேஷன் கடைகளில் மானிய விலையில் பொருட்கள்.. மாடி தோட்டம் அமைக்க ஒரு வீட்டிற்கு ரூ.5,000 : புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு!! appeared first on Dinakaran.