வீட்டில் தனியாக இருந்தபோது பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது

துரைப்பாக்கம்: செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ரேணுகா (55). பெயர் மாற்றப்பட்டுள்ளது. கணவனை இழந்த இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பாலு (45), தனியாக இருந்த ரேணுகா வீட்டிற்குள் புகுந்துள்ளார். பின்னர் அவர் ரேணுகாவை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலுவை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் தனியாக வீட்டில் இருந்த பெண்ணை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்தது உண்மை என்பது தெரியவந்தது. பின்னர் பாலு மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post வீட்டில் தனியாக இருந்தபோது பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: