3 மாதத்தில் மட்டும் பல்வேறு துறைகளில் 6032 பேர் தேர்வு: டிஎன்பிஎஸ்சி தகவல்

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த 1.5.2024 முதல் 31.7.2024 வரையிலான காலத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (குரூப் 2ஏ) அடங்கிய பதவிகளுக்கு 5413 பேரும், வேளாண்மை அலுவலர் (விரிவாக்கம்) பதவிக்கு 51 பேரும், தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு 85 பேரும், உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கு 9 பேரும், ஒருங்கிணைந்த கணக்குப் பணிகள் அடங்கிய பதவிகளுக்கு 43 பேரும், உதவி வேளாண்மை அலுவலர் பதவிக்கு 82 பேரும், உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு 157 பேரும், பணிமேற்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர் பதவிக்கு 91 பேரும் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மொத்தம் 6032 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

The post 3 மாதத்தில் மட்டும் பல்வேறு துறைகளில் 6032 பேர் தேர்வு: டிஎன்பிஎஸ்சி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: