புரட்சி பாரதம் கட்சியின் மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் மனைவியின் திருவுருவப்பட திறப்பு விழா: பூவை எம்.ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ பங்கேற்பு

திருவள்ளூர்: புரட்சி பாரதம் கட்சியின் மாநில இளைஞரணி பொதுச் செயலாளரும் மாவட்ட செயலாளருமான வளசை எம்.தர்மன் என்பவரின் மனைவியும் அரசு பள்ளி ஆசிரியையுமான டி.தேவி (45) உடல் நலக் குறைவு காரணமாக கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து 15 ம் நாள் நினைவு அஞ்சலி மற்றும் படத்திறப்பு விழா சென்னை வளசரவாக்கம், அம்பேத்கர் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ கலந்துகொண்டு ஆசிரியை டி.தேவி திருவுருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் சினிமா ஆர்டிஸ்ட் வெங்கல் கதிர், முதன்மை செயலாளர் டி.ருசேந்திரகுமார், துணை பொதுச்செயலாளர்கள் பி.காமராஜ், முல்லை கே.பலராமன், மாநில செயலாளர்கள் பழஞ்சூர் பி.வின்சென்ட், பூவை ஆர்.சரவணன், பி.பரணிமாரி, மாநில இளைஞரணி தலைவர் மணவூர் ஜி.மகா, தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் தலைவர்பி.எஸ்.அமல்ராஜ், மாநில நிர்வாகிகள் பி.சைமன்பாபு, ஒய்.ஜான்சன் ஆம்ஸ்ட்ராங், கே.எஸ்.ரகுநாத், பிடிசி சேகர், மணிமாறன், நயப்பாக்கம் டி.மோகன், என்.பி.முத்துராமன், இ.ரமேஷ், ராக்கெட் ரமேஷ், முகப்பேர் கோபு, பூவை முரளி, சி.எல்.எட்மன், மாவட்ட செயலாளர்கள் கண்ணதாசன், மகிமைதாஸ், பி.ரஞ்சித், தன்ராஜ், ஆனந்தன், அசேன்குமார், வழக்கறிஞர் பி. தாமஸ் பர்ணபாஸ், சி.டி சேகர், பாரதி மற்றும் மாநில மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

The post புரட்சி பாரதம் கட்சியின் மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் மனைவியின் திருவுருவப்பட திறப்பு விழா: பூவை எம்.ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: