இலங்கை கடற்படை ரோந்துப் படகு மோதியதில் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: இலங்கை கடற்படை ரோந்துப் படகு மோதியதில் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் மலைச்சாமி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டார். விசைப்படகில் சென்ற 2 மீனவர்களை இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றதாகத் தெரியவருகிறது. தமிழ்நாடு அரசு தொடர்ந்து பலமுறை கடிதம் மூலமாகவும் நேரிலும் ஒன்றிய அரசை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

The post இலங்கை கடற்படை ரோந்துப் படகு மோதியதில் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: