3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் ஒன்றிய அரசு 4 வாரங்களில் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு!!

சென்னை : 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் ஒன்றிய அரசு 4 வாரங்களில் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த ஜீவன்குமார் தாக்கல்  செய்த மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய குற்றவியல் சட்டங்களின் பெயர்களை புரிந்து கொள்வதில் மட்டுமல்லாமல், உச்சரிக்கவும் முடியவில்லை எனவும் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாக மூன்று சட்டங்களுக்கும் இந்தியில் பெயரிடப்பட்டுள்ளது எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

The post 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வழக்கில் ஒன்றிய அரசு 4 வாரங்களில் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு!! appeared first on Dinakaran.

Related Stories: