தற்போது வெளிப்படுத்தப்பட்ட வடிகால் சுமார் 174 செ.மீ நீளம் கொண்டுள்ளது. இந்த வடிகால் குழாயின் தொடர்ச்சி அடுத்தக் குழிக்குள்ளும் நீள்கிறது. உருளைக்குழாய் வடிகாலின் தொடர்ச்சி, நீளம் மற்றும் பயன்பாடு பற்றி அறிய அடுத்த குழியை அகழ்ந்து ஆய்வதற்கானப் பணிகளும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. தமிழரின் பண்பாட்டினையும், தொன்மையையும் உலகறியச் செய்ய தமிழ்நாடு அரசு, தொல்லியல் துறையின் பணி முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலுடன் பீடுநடைபோடுகிறது என தொல்லியல் ஆணையர் சிவானந்தம் தெரிவித்துள்ளார்.
The post சுடுமண் உருளை வடிவ குழாய்கள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.