கேரளா: வயநாடு நிலச்சரிவில் சிக்கி 9 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 தமிழர்கள் மாயமாகியிருப்பது தெரியவந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆக உள்ளது. வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் தோண்டத் தோண்ட உடல்கள் இருப்பதாக மீட்புக்குழுவினர் அதிர்ச்சித் தகவல் தெரிவித்துள்ளனர்.