எர்ணாகுளம்-பெங்களூர் வந்தே பாரத் ரயில் கிருஷ்ணராஜபுரத்தில் நின்று செல்லும்

 

திருப்பூர், ஜூலை 31: எர்ணாகுளம்-பெங்களூர் செல்லும் வந்தே பாரத் ரயில் கிருஷ்ணராஜபுரத்தில் நின்று செல்லும் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாரம் மூன்று முறை இயக்கப்படும் எர்ணாகுளம்-பெங்களூர் வந்தே பாரத் சிறப்பு ரயில் திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக பெங்களூர் செல்கிறது.

இந்த ரயில் பயணிகள் வசதிக்காக சிறப்பு நிறுத்தமாக கிருஷ்ணராஜபுரத்தில் நின்று செல்லும். அதன் படி எர்ணாகுளம் – பெங்களூர் வந்தே பாரத் சிறப்பு ரயில் (எண்; 06001) கிருஷ்ணராஜபுரத்தில் இரவு 9.05 முதல் 9.07 வரை நின்று செல்லும். அதே போல் பெங்களூர்-எர்ணாகுளம் வந்தே பாரத் சிறப்பு ரயில் கிருஷ்ணராஜபுரத்தில் காலை 5.40 முதல் 5.42 வரை நின்று செல்லும். இந்த தகவலை சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post எர்ணாகுளம்-பெங்களூர் வந்தே பாரத் ரயில் கிருஷ்ணராஜபுரத்தில் நின்று செல்லும் appeared first on Dinakaran.

Related Stories: