தாராபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

 

தாராபுரம், ஜூலை 31: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான பொதுமக்களின் பல்வேறு தேவைகள் குறித்த விண்ணப்பங்கள் பெறும் நிகழ்ச்சி உடுமலை சாலை ரோட்டரி மஹால் திருமண மண்டபத்தில் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி தலைவர் செல்வி ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

தாராபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் செந்தில்குமார், தாசில்தார் கோவிந்தசாமி, தாராபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுருநாதன், எத்திராஜ், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் சசிகுமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் நாச்சிமுத்து ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமில், அரசின் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகள் சார்ந்த பொதுமக்களிடம் இருந்து 1200க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

நடைபெற்ற நிகழ்ச்சியில் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தெய்வசிகாமணி, கிராம பஞ்சாயத்து உதவி இயக்குனர் நாகராஜ், நர்மதா ஈஸ்வரன், தனலட்சுமி நாகராஜ், ஊராட்சி செயலாளர் நாகராஜ், வார்டு கவுன்சிலர் பாலசுப்பிரமணியம் பலர் கலந்து கொண்டனர்.

The post தாராபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் appeared first on Dinakaran.

Related Stories: