₹35 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

நாமக்கல், ஜூலை 31: நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், பருத்தி ஏலம் நேற்று நடைபெற்றது. நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் 1,430 மூட்டை பருத்தி கொண்டு வந்திருந்தனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். கூட்டுறவு சங்க அலுவலர்கள், விவசாயிகள் முன்னிலையில் ஏலம் நடத்தினர். இதில் ஆர்சிஎச் ரகம் பருத்தி குவிண்டால் ₹7,511 க்கும், மட்ட ரகம் பருத்தி குவிண்டால் ₹4,955 க்கும் ஏலம் போனது. மொத்தம் ₹35 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.

The post ₹35 லட்சத்திற்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: