பெண்களை இழிவுபடுத்தி வீடியோ பிரபல யூடியூபர் பிரியாணி மேன் கைது

சென்னை: தேனாம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை தெற்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், நான் தினம்தோறும் காலையில் நடைபயிற்சி செய்யும் செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிப்படுத்தும் வகையிலும் ஆபாசமான உடல் மொழி சைகை மூலம் பிரபல யூடியூபர் ‘பிரியாணி மேன்’ என்ற அபிஷேக் ரபி (29) என்பவர் தனது யூடியூப் சேனலில் வீடியோ பதிவு செய்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்து இருந்தார். அதன்பேரில், சென்னை தெற்கு சைபர் க்ரைம் போலீசார், பிரியாணி மேன் வீடியோ பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், அவர் செம்மொழி பூங்கா மற்றும் பெண்கள் குறித்து அவதூறாக பேசியது உறுதியானது. அதைதொடர்ந்து பிரியாணி மேன் என்ற அபிஷேக் ரபி மீது, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

The post பெண்களை இழிவுபடுத்தி வீடியோ பிரபல யூடியூபர் பிரியாணி மேன் கைது appeared first on Dinakaran.

Related Stories: