புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 12.50 மணிக்கு புறப்படும். திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும். இரவு 10 மணிக்கு பெங்களூரு சென்றடையும். புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எர்ணாகுளத்தில் இருந்து இந்த ரயில் இயக்கப்படும். பின்னர் இந்த ரயில் காலை 5.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.20 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். இந்த ரயில் ஒவ்வொரு வாரமும் வியாழன், சனி மற்றும் திங்கட்கிழமைகளில் பெங்களூருவில் இருந்து எர்ணாகுளத்திற்கு செல்லும். தற்போது, கேரளாவில் திருவனந்தபுரம்-காசர்கோடு மற்றும் திருவனந்தபுரம்-மங்களூரு வழித்தடத்தில் இரண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
The post போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக எர்ணாகுளம் – பெங்களூரு இடையே புதிய வந்தே பாரத் ரயில்: நாளை முதல் இயக்கப்படுகிறது appeared first on Dinakaran.