அரசு மருத்துவமனையில் 2 கைதிகளுக்கு சிகிச்சை

சேலம், ஜூலை 30: சேலம் பள்ளப்பட்டி ஏரிக்கரை முனியப்பன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிச்சா (எ) கிருஷ்ணமூர்த்தி(53). இவரை அன்னதானப்பட்டி போலீசார், கொலை வழக்கு ஒன்றில் கைது செய்து, மத்திய சிறையில் அடைத்திருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென கிருஷ்ணமூர்த்திக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதே போல், மற்றொரு கைதி சக்திவேல்(32) என்பவருக்கும் திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரையும் மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது 2 கைதிகளுக்கும், போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post அரசு மருத்துவமனையில் 2 கைதிகளுக்கு சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: