கிழக்கு மாவட்ட மதிமுக சார்பில் கொடி ஏற்று விழா

ஆத்தூர், ஜூலை 30: சேலம் கிழக்கு மாவட்ட மதிமுக சார்பில், கட்சியின் தொடக்க நாளை முன்னிட்டு, ஆத்தூர் அருகே பைத்தூர், கூலமேடு, கெங்கவல்லி ஒன்றியம் தம்மம்பட்டி, கெங்கவல்லி, கூடமலை மற்றும் தலைவாசல் தெற்கு ஒன்றியம், வீரகனூர் பேரூராட்சி, நாவலூர் ஊராட்சி, தலைவாசல் வடக்கு ஒன்றியம் தலைவாசல், நத்தகரை ஊராட்சி, பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் தும்பல் ஊராட்சி, நரசிங்கபுரம் நகரம் ஆகிய 20க்கும் மேற்பட்ட இடங்களில் மாவட்ட செயலாளர் கோபால்ராசு தலைமையில், கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில், மாவட்ட அவை தலைவர் ஜெயராமன், மாவட்ட பொருளாளர் துரை ரவிச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் பொன்சேதுபதி, கோவி அசோகன், காட்டுக்கோட்டை ராமு, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கநெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கிழக்கு மாவட்ட மதிமுக சார்பில் கொடி ஏற்று விழா appeared first on Dinakaran.

Related Stories: