அடிப்படை பிரச்னைகளை வலியுறுத்தி மா.கம்யூ கட்சியினர் மக்கள் சந்திப்பு இயக்கம்

 

திருப்பூர், ஜூலை 30: திருப்பூர் ஊத்துக்குளியில் பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 6 இடங்களில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. ஊத்துக்குளி ஆர்.எஸ் பகுதியில் தொடங்கிய இந்த மக்கள் சந்திப்பு இயக்கம் அணைப்பாளையம், பாப்பம்பாளையம், புதுப்பாளையம், தேனீஸ்வரன்பாளையம் ஆகிய ஊர்கள் வழியாக சென்று ஊத்துக்குளி டவுன் பகுதியில் நிறைவு பெற்றது. இந்த மக்கள் சந்திப்பு இயக்கத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் குழந்தைசாமி தலைமை வகித்தார்.

பாப்பம்பாளையம் கிளை செயலாளர் சுப்பிரமணி, புதுப்பாளையம் கிளை செயலாளர் மூர்த்தி, கே.கே.நகர் கிளை செயலாளர் சேகர், குன்னம்பாளையம் கிளைச் செயலாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமார், தாலுகா செயலாளர் கொளந்தசாமி, சிவசாமி, லெனின், மணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த மக்கள் சந்திப்பு இயத்தில் சாலை வசதி, தெருவிளக்கு வசதி, பட்டா வழங்குவது, புதிய குடியிருப்புகள் கட்டிக்கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்னைகள் குறித்து பேசப்பட்டது. இந்த மக்கள் சந்திப்பு இயக்கத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post அடிப்படை பிரச்னைகளை வலியுறுத்தி மா.கம்யூ கட்சியினர் மக்கள் சந்திப்பு இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: