ஜெய்வாபாய் பள்ளியில் மாணவிகளுக்கு இணை சீருடைகள் வழங்கல்

 

திருப்பூர், ஜூலை 30: அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் மாணவ மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான இணை சீருடை வழங்கும் விழா ஜெய்வாபாய் பள்ளியில் நடந்தது.

இதற்கு சப்-கலெக்டர் சவுமியா ஆனந்த் தலைமை தாங்கி சீருடைகளை வழங்கினார். இதில் மாவட்ட சமுக நலத்துறை அதிகாரி ரஞ்சிதா தேவி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்டத்தில் 1407 பள்ளிகளை சேர்ந்த 1 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு முதற்கட்டமாக இந்த சீருடைகள் வழங்கப்பட இருக்கிறது.

The post ஜெய்வாபாய் பள்ளியில் மாணவிகளுக்கு இணை சீருடைகள் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: