கைதானவர் மீது குண்டாஸ் பாய்ந்தது

பரமத்திவேலூர், ஜூலை 29: பரமத்திவேலூரை அடுத்துள்ள சோழசிராமணி அருகே ஜமீன் இளம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை (54), விவசாயி. இவர் அப்பகுதியில் சாராய ஊறல் போட்டு கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தார். இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி, அண்ணாமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஜாமீனில் வந்த அவர், ஜூன் 20ம் தேதி அதேபோல் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக, அண்ணாமலையை மீண்டும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அண்ணாமலை தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக பல வழக்குகள் அவர் மீது இருப்பதால், அண்ணாமலையை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க, மாவட்ட எஸ்பி ராஜேஷ்கண்ணன் பரிந்துரையின் பேரில், கலெக்டர் உமா குண்டர் சட்டத்தில் அடைக்க ஆணையிட்டார். அதன் பேரில், பரமத்தி இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், அண்ணாமலையை குண்டர் தடுப்பு சட்டத்தில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post கைதானவர் மீது குண்டாஸ் பாய்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: