மாட்டு வண்டி பந்தயம்

 

சிங்கம்புணரி, ஜூலை 29: சிங்கம்புணரியில் பாகுபலி குரூப்ஸ் சார்பாக இரண்டாம் ஆண்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் சின்ன மாடு, பெரிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் 54 ஜோடி காளைகள் கலந்து கொண்டன. பெரிய மாடுகள் பிரிவில் 16 ஜோடிமாடுகளும், சின்ன மாடுகள் பிரிவில் 36 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டன.

இதில் சிவபுரிபட்டி விலக்கில் இருந்து ஒன்பது கிலோ மீட்டர் தூரம் பந்தய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் சாரதிகள் இலக்கை நோக்கி மாடுகளை லாவகமாக ஓட்டினர். போட்டிகளை சாலையின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு பரிசுகள் கோப்பைகள் வழங்கப்பட்டது.

The post மாட்டு வண்டி பந்தயம் appeared first on Dinakaran.

Related Stories: