உச்ச நீதிமன்றம் சென்றும் காவிரி விவகாரத்தில் எதையும் சாதிக்க முடியாத நிலையில், இனிமேலாவது இயற்கை அன்னை நமக்கு கொடையாக வழங்கி வரும் தண்ணீரை சேமிக்க வேண்டும். யாருடைய தயவையும் எதிர்பாராமல் தொலைநோக்கு பார்வையோடு நமக்கு கிடைக்கும் தண்ணீர் வீணாக கடலில் கலக்காமல் தடுக்க, தடுப்பணைகளை அமைத்து தண்ணீரை சேமிக்க வேண்டும். விவசாயத்திற்கும், தொழில்களுக்கும், குடி தண்ணீருக்கும் யாரிடமும் இனிவரும் காலங்களில் மண்டியிடாத தன்னிறைவு பெற்ற நாடாக தமிழ்நாட்டை இந்த அரசு கொண்டு வர வேண்டும்.
The post தமிழகத்தில் தடுப்பணைகள் அமைத்து தண்ணீரை சேமிக்க சரியான திட்டம் செயல்படுத்த வேண்டும்: பிரேமலதா வலியுறுத்தல் appeared first on Dinakaran.