நிலம் வாங்கி தருவதாக கூறி மோசடி பா.ஜ முன்னாள் எம்.பி மகன் கைது

பாரபங்கி: உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் சாஸ்திரி நகர் பகுதியில் வசித்து வருபவர் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரான பன்வாரி லால் கன்சால். பா.ஜவை சேர்ந்த இவரது மகன் அமித் கன்சால். அமித் கன்சால் மற்றும் அவரது கூட்டாளிகள் 6 பேர் நிலம் வாங்கி தருவதாக கூறி ரிதுராஜ் சிங் என்பவரிடம் ரூ.2.20 கோடி வாங்கி உள்ளனர். ஆனால் நிலம் வாங்கி தராமல் இழுந்தடித்து வந்துள்ளனர்.

இதையடுத்து ரிதுராஜ் சிங், கடந்த ஜனவரி 14ம் தேதி பணத்தை திருப்பி தரும்படி அமித் கன்சாலிடம் கேட்டுள்ளார். ஆனால் பணத்தை திருப்பி தராமல் ரிதுராஜ் சிங்கை கொன்று விடுவதாக அமித் கன்சால் மற்றும் அவரது கூட்டாளிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ரிதுராஜ் சிங் அளித்த புகாரின் அடிப்படையில், அமித் கன்சாலை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

The post நிலம் வாங்கி தருவதாக கூறி மோசடி பா.ஜ முன்னாள் எம்.பி மகன் கைது appeared first on Dinakaran.

Related Stories: