×

பீகாரை சேர்ந்த சிறுமி கணவன், பெற்றோர் மீது புகார்

உடுப்பி: பீகாரை சேர்ந்த சிறுமி தனது கணவன் மற்றும் பெற்றோர் மீது புகார் அளித்துள்ள சம்பவம் உடுப்பி மாவட்டத்தில் நடந்துள்ளது.  பீகாரை சேர்ந்த சாந்தினி காட்டூன் என்ற சிறுமி உடுப்பியில் வசித்து வருகிறார். இவரது பெற்றோர் இவரை வற்புறுத்தி இம்தியாஸ் தேவன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் சாந்தினி கர்ப்பமடைந்து 2023ம் ஆண்டு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இவர் மீண்டும் கர்ப்பமடைந்ததை தொடர்ந்து கடந்த 13ம் தேதி வயிற்று வலி காரணமாக மங்களூரு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது சாந்தினியின் ஆதாரை பார்த்த மருத்துவமனை ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் விசாரித்ததில் சாந்தினி மைனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசாரின் ஆலோசனையின் பேரில் சாந்தினி காபு காவல் நிலையத்தில் தனது கணவர் இம்தியாஸ் தேவன், பெற்றோர் முகமது தயாப் ரைன், ஜூலேகா கட்டூன் ஆகியோர் மீது புகார் அளித்தார். இவர்கள் மீது போலீசார் போக்சோ வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

The post பீகாரை சேர்ந்த சிறுமி கணவன், பெற்றோர் மீது புகார் appeared first on Dinakaran.

Tags : Bihar ,Udupi ,Shantini Kartun ,Imtias ,
× RELATED கனமழை காரணமாக பீகார் மாநில அரசின் தலைமைச் செயலக சுற்றுச்சுவர் இடிந்தது