சென்னை : கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக அரசு தரக்கூடாது என தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்று நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், செந்தில் குமார் அமர்வு தெரிவித்துள்ளது. எந்த ஆதாரமும் இல்லாமல் விளம்பர நோக்கத்துக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.