போக்சோ வழக்கில் கைதான அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்

 

திருப்பூர், ஜூலை 26: காங்கயம் அடுத்த முத்தூர் கொடுமுடி சாலையில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 13 வருடங்களாக தமிழாசியராக பணியாற்றி வருபவர் முத்தூரை சேர்ந்த ரவிச்சந்திரன் (59). இவர் கடந்த மாதம் வகுப்பறையில் மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்தும்போது மாணவிகளை பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அபாசமாக திட்டியதாகவும் மாணவிகள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

அதன் பேரில் பெற்றோர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், காங்கயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும் அளித்த புகாரின் அடிப்படையில், ரவிச்சந்திரனை மகளிர் போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். இந்நிலையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ரவிச்சந்திரன் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (பொறுப்பு) பாலமுரளி உத்தரவு பிறப்பித்தார்.

The post போக்சோ வழக்கில் கைதான அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: