சிவகங்கை நகராட்சியில் புதிய கட்டிடம் திறப்பு

சிவகங்கை, ஜூலை 25: சிவகங்கை நகராட்சியில் புதிய கட்டிடம் மற்றும் சிறுமின் விசை பம்பு திறப்பு விழா நடைபெற்றது. சிவகங்கை நகராட்சி 8வது வார்டு சுண்ணாம்பு காளவாசல் பகுதியில் உள்ள நுண் உர செயலாக்க மைய புதிய கட்டிடம் மற்றும் 18வது வார்டு மாப்பிள்ளைத்துரை ஊரணி அருகே அமைக்கப்பட்ட சிறு மின் விசை பம்ப் ஆகியவற்றை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் திறந்து வைத்தார்.

நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணாராம், நகர்மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், ஜெயாஜெனிபர், ராஜேஸ்வரி ராம்தாஸ், அமுதாபாண்டியன், கீதாகார்த்திகேயன், காந்தி, மதியழகன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சண்முகராஜன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

The post சிவகங்கை நகராட்சியில் புதிய கட்டிடம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: