மின் கம்பத்தை அகற்ற கோரிக்கை

 

ஆர்.எஸ்.மங்கலம், ஜூலை 25: திருப்பாலைக்குடியில் ஆபத்தை விளைவிக்க கூடிய வகையில் சாலையின் நடுவில் உள்ள மின் கப்பத்தை அகற்றிட மின் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் திருப்பாலைக்குடி,பழங்கோட்டை கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து திருப்பாலைக்குடி பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் ஈஜிஆர் சாலையின் சந்திப்பிற்கு அருகே சாலையின் நடுவே மின் கம்பம் உள்ளது. இது ஏதேனும் பெரும் விபத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து ஊருக்குள் திரும்பும் வாகனங்களோ அல்லது ஊருக்குள் இருந்து கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்லும் வாகனங்களோ இந்த சாலையின் நடுவில் உள்ள மின் கம்பத்தை கடந்தே செல்ல வேண்டி நிலை உள்ளது. இந்த மின்கம்பம் அமைந்துள்ள பகுதியின் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி, பஸ் நிறுத்தம் மற்றும் ரேசன் கடை, சந்தை, ஆட்டோ ஸ்டாண்ட்,குடிதண்ணீர் குளம் உள்ளிட்டவை அமைந்துள்ளது.
மின் கம்பத்தில் ஏதேனும் வாகனங்கள் தெரியாமல் மோதி பெரும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மின் வாரியம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post மின் கம்பத்தை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: