ஆட்டையாம்பட்டி, ஜூலை 25:ஆட்டையாம்பட்டி அடுத்துள்ள கொம்பாடிப்பட்டி பகுதியில் செங்கோடன் மகன் செந்தில்குமார் (44), மளிகை கடை நடத்தி வருகிறார். இருக்கு சொந்தமான குடோனில், புகையிலை பொருட்கள் இருப்பதாக வந்த தகவலின்பேரில் போலீசார், சோதனை நடத்தி, ₹18,800 மதிப்புள்ள 32,300 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, தலைமறைவான செந்தில்குமாரை தேடி வந்த நிலையில், நேற்று அவரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
The post குடோனில் புகையிலை பதுக்கியவர் கைது appeared first on Dinakaran.