மதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

 

கோவை, ஜூலை 24: கோவை மாநகர் மாவட்ட மதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காந்திபுரத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் கணபதி செல்வராஜ் தலைமை தாங்கினார். உயர்நிலை குழு உறுப்பினர் ஆர்.ஆர்.மோகன்குமார் முன்னிலை வகித்தார். இதில், அவினாசி ரோடு மேம்பாலம் கட்டுமான பணியில், பீளமேடு-வி.கே.ரோடு சந்திப்பில் ஏற்படும் இடையூறு சம்பந்தமாக அடுத்தக்கட்ட பணி மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், இதுசம்பந்தமாக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் அ.சேதுபதி, மாநில சட்டத்துறை செயலாளர் வக்கீல் சூரி நந்தகோபால், மாவட்ட துணை செயலாளர் பயனீர் தியாகு, பீளமேடு பகுதி செயலாளர் எஸ்.பி.வெள்ளியங்கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: