மேட்டுப்பாளையம் அருகே சாலையில் ஜாலியாக வாக்கிங் சென்ற `பாகுபலி’

 

மேட்டுப்பாளையம், ஜூலை 24: மேட்டுப்பாளையம் அருகே சாலையில் பாகுபலி யானை ஜாலியாக வாக்கிங் சென்றதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து நேற்று காலை 6 மணியளவில் வெளியேறிய பாகுபலி யானை வனத்திலிருந்து வெளியேறி சமயபுரம் சாலையில் ஜாலியாக வாக்கிங் சென்றது. பின்னர், நெல்லிமலை வனப்பகுதிக்குள் நுழைந்தது. அப்போது அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள் யானையை பார்த்து பீதியடைந்தனர்.

இருப்பினும், யானை பொதுமக்களுக்கு தொல்லை தராமல் சாலையை கடந்து சென்றது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,“மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா விரைவில் நடைபெற உள்ள நிலையில் பாகுபலி யானையின் நடமாட்டம் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவிழா காலம் என்பதால் வனத்துறையினர் இப்பகுதியில் முகாமிட்டு பாகுபலி யானை ஊருக்குள் நுழையாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

The post மேட்டுப்பாளையம் அருகே சாலையில் ஜாலியாக வாக்கிங் சென்ற `பாகுபலி’ appeared first on Dinakaran.

Related Stories: