வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 8 பவுன் தாலி செயின் பறிப்பு

ராசிபுரம், ஜூலை 23: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வெண்ணந்தூர் சொசைட்டி தெருவைச் சேர்ந்தவர் எல்ஐசி முகவர் நந்தகுமார். இவர் நேற்று காலை, வாக்கிங் சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்திருந்தது. அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த மர்ம நபர், திடீரென வீட்டிற்குள் புகுந்தார். அவர் அங்கு தூங்கிக்கொண்டிருந்த நந்தகுமாரின் மனைவி சுகுணா(43) கழுத்தில் அணிந்திருந்த, 8 பவுன் தாலி செயினை பறித்தார். அப்போது கண்விழித்த சுகுணா கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள், மர்மநபர் அங்கிருந்து நகையுடன் தப்பியோடி விட்டார். இதுகுறித்து சுகுணா, வெண்ணந்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

The post வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 8 பவுன் தாலி செயின் பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: